திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து... பல லட்சம் மதிப்பிலானபொருட்கள் எரிந்து சேதம்

0 343

திருப்பூர் - இடுவம்பாளையம் சாலையில், பால்மணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில், பனியன் துணிகள், இயந்திரங்கள் உட்பட  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று விடுமுறையையொட்டி பூட்டப்பட்டிருந்த பனியன் நிறுவனத்தில் நள்ளிரவில்  தீப்பற்றி எரிந்தது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து  வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments