நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பெரும்பான்மை மக்கள் ஆதரவு - ராகுல் காந்தி

0 363

நாட்டு மக்களே சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், விரைவில் நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில், 74 சதவீதம் பேர் அதற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். அதைக் குறிப்பிட்டு காங்கிரஸின் சமூக வலைதளத்தில் வெளியான பதிவை, தனது எக்ஸ் வலைதளத்தில் ராகுல் பகிர்ந்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்துவிடலாம் என மோடி கனவு காண்பதாகவும், எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments