விஜயகாந்தின் 72-வது பிறந்த நாளில் அவரது உருவச்சிலை திறப்பு..!

0 334

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு வந்த அவருடைய பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் அவரது முழு உருவச் சிலையை பிரேமலதா திறந்து வைத்தார். சிலையை ஆரத்தழுவிய பிரேமலதா கண்ணீருடன் முத்தமிட்டார்.....

அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வரும் நிலையில் தனது வீட்டிற்கும், தமிழிசை வீட்டிற்கும் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு எந்த காரணமும் இல்லாமல் திரும்ப பெறப்பட்டுள்ளதாக பிரேமலதா கூறினார்.

நினைவிட வளாகத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் விஜயகாந்த் பாடலைக் கேட்ட பெண்கள் பலர் கண்ணீர் விட்ட நிலையில், சிலர் குத்தாட்டம் போட்டனர். கூட்ட நெரிசல், வெயில் காரணமாக மயங்கி விழுந்த விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments