மது பாரில் கியூ ஆர் ஸ்கேன் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி .. வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து தாக்குதல்?...

0 444

கோயம்பேட்டில் உள்ள மது பாரில்,  கியூ ஆர் ஸ்கேன் பயன்படுத்தி  5 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 3 பேரை தனியறையில் அடைத்து வைத்துத் தாக்கிய பார் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் க்யூ ஆர் ஸ்கேன் முலம் வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று எடுத்துக்கொண்டதைக் கண்டுபிடித்த மேலாளர் சையத்து சபருல்லா மூவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பிலும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஊழியர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments