தி.மு.க.வை போல் பா.ஜ.க.வும் இரட்டை வேடம் போடுகிறது - இ.பி.எஸ் விமர்சனம்

0 789

தி.மு.க.வை போல் பா.ஜ.க.வும் இரட்டை வேடம் போட்டு மக்களிடம் நாடகமாடுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பேட்டியளித்த அவர் இதனை கூறினார்.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய விவகாரத்தில் தி.மு.க. அரசை குற்றஞ்சாட்டியதால், பா.ஜ.க. மாநில தலைவர் தம்மை குறைசொல்வதாக கூறினார்.

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் மத்திய அரசிடம் இருந்து அண்ணாமலை கொண்டு வரவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

விஜய்யுடன் கூட்டணி அமையுமா, அமையாதா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments