நீண்ட காலமாக இருந்த சொத்து தகராறு.. தட்டிக் கேட்ட தம்பியை கொலை செய்த அண்ணன் - குடியாத்ததில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

0 219

குடியாத்தம் அருகே சொத்து தகராறில் தம்பியைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டுத் தப்பியோடிய அண்ணனை போலீஸார் கைது செய்தனர். செட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கவியரசனின் அண்ணன் கார்த்திகேயன் சொத்து சம்பந்தமாகத் தம்பி மனைவி பாரதியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த கவியரசன் அண்ணன் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, கார்த்திகேயன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவியரசனின் முதுகில் நான்கு முறை குத்தியதில் இறந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments