பட்டாசு தயாரிப்பின் போது வெடி விபத்து..2 பேர் உடல் சிதறி பலி - உரிமையாளருக்கு வலைவீச்சு..!

0 158

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பூலா மலை அடிவாரத்தில் உள்ள ஓர் தோட்டத்தில் குடிசை தொழில் போல் பட்டாசு தயாரிப்பு நடந்துவந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு பட்டாசு தயாரிப்பில் இருவர் ஈடுபட்டிருந்தபோது வெடி விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

உடல் சிதறியதால் இறந்துபோன இருவரையும் அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளதாகவும், 2 மாதங்களாக பட்டாசு தயாரிப்பு உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ளதாக கூறப்படும் நிலையில், உரிமையாளரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments