பழநி முருகன் மாநாடு தி.மு.க. அரசின் ஓட்டுக்கான யுக்தி - தமிழிசை சவுந்தரராஜன்..!

0 721

பழநி முத்தமிழ் முருகன் மாநாடு தி.மு.க. அரசின் ஓட்டுக்கான யுக்தி என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ஆன்மீகம் பேசாமல் தமிழ்நாட்டில் இனி அரசியல் செய்ய முடியாது என்பதை அம்மாநாடு உணர்த்துவதாகவும் கூறினார்.

மற்ற மத நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை. என்றும் தமிழிசை குறிப்பிட்டார். மேலும், தமிழக வெற்றிக்கழக கொடி விவகாரத்தில் சட்டரீதியாக தவறு இருந்தால் அதனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments