எக்ஸ் தளத்திலிருந்து தற்காலிகமாக விலகிறோம் - திருச்சி எஸ்.பி. வருண்குமார்..!

0 345

எக்ஸ் வலைதளத்தில் இருந்து தானும், தனது மனைவியான புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டேவும் தற்காலிகமாக விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் அறிவித்துள்ளார். தன்னைப் பற்றிய ஆபாசப் பதிவுகளை நீக்காத மற்றும் மன்னிப்புக் கேட்காத சம்மந்தப்பட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மீதும் இரண்டு பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக வருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தன்னையும், தனது குடும்பத்தினரையும் அருவெறுக்கத்தக்க வகையில் விமர்சித்த 51  பேரின் போலி எக்ஸ் தள ஐ.டிக்களின் பட்டியலும் அவர் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments