தென்காசியில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற ரவுடிக்கு கால்முறிவு... மாவுக்கட்டுடன் சிறையில் அடைப்பு

0 394

தென்காசி மாவட்டம் கடையம் அருகே போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த சரித்திரப்பதிவேடு ரவுடி பாலமுருகனுக்கு கால் முறிந்த நிலையில், மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடையத்தைச் சேர்ந்த பாலமுருகன் மீது தமிழகம் மற்றும் கேரளாவில், 72க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், கடந்த மே மாதம் பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திருச்சூர் உயர் பாதுகாப்பு சிறைக்கு கொண்டு சென்றபோது சிறை வாசலில் இருந்து தப்பியவர், 3 மாதத்துக்குப்பின் பிடிபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments