பழனியில் இன்று துவங்குகிறது முத்தமிழ் முருகன் மாநாடு... முருகன் புகழ் பரப்புவோருக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம்

0 710

பழனியில் இரண்டுநாள் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில், மாநாட்டுக் கலையரங்கத்தில் உள்ள அறுபடை முருகனின் சிலைகளை மாநாடு முடிந்த பிறகும் ஒருவாரம் காண அனுமதிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலமாக இன்று வாழ்த்துரை வழங்க உள்ளதாக தெரிவித்தார். வெளிநாடுகளைச் சேர்ந்த 300 பேர் முருகன் தொடர்பான ஆய்வு கட்டுரை சமர்பித்திருப்பதாகவும், முருகனின் புகழ் பரப்பும் 16 பேருக்கு தலா ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் சான்றிதழ் மாநாட்டில் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments