கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை..!

0 599

தேனி அரண்மனைப்புதூரில், 5 மாத கர்ப்பிணி மனைவியையும், 5 வயது பெண் குழந்தையையும் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட சதீஷ், 2 மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த நிலையில், அவரது மனைவி அஜித்தாவின் குடும்பத்தினரினர் மேற்கொண்ட செல்போன் அழைப்புகளுக்கு தம்பதி பதில் அளிக்காததால், வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் இந்த விபரீதம் தெரியவந்தது. இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை என்றும் மனைவி, மகளை தனியே விட்டுச் செல்ல மனமில்லாததால் அவர்களையும் அழைத்துச் செல்கிறேன் என்றும் சதீஷ் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments