தாய்லாந்தில் சிறு விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழப்பு..!

0 343

தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே சதுப்பு நிலப் பகுதியில் சிறு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 9 பேரும் உயிரிழந்தனர். பாங்காக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து டிராட் மாகாணத்துக்கு அந்த விமானம் சென்றுகொண்டிருந்தது. தாய் விமான சேவை என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள், 2 பைலட்டுகள் உள்பட தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேர் இருந்தனர். புறப்பட்ட 11 நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து நேர்ந்த இடத்தில் தாய்லாந்து காவல் துறையின், தடயவியல் நிபுணர்களும், மீட்புக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments