ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பிய ரயில்வே எஸ்.பி ஈஸ்வரன்..!

0 294

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 அடி உயரம் கொண்ட பெயர் பலகை மீது ஏறி கூச்சலிட்டு பயணிகளுக்கு இடையூறு விளைவித்த 30க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை பிடித்த ரயில்வே போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

திருவள்ளூர்- சென்னை புறநகர் ரயிலில் வந்த மாணவர்கள், தங்களது குழுவின் கெத்தை காட்டுவதற்காக பெயர் பலகையின் மீது ஏறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மீண்டும் இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என மாணவர்களை தமிழக ரயில்வே காவல் எஸ்.பி ஈஸ்வரன் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments