மரப்பட்டறை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!

0 203

காஞ்சிபுரம் தாயார் அம்மன் குளம் பகுதியில் மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். முரளி என்பவருக்குச் சொந்தமான அந்த பட்டறையில் நேற்று மரத்தூளை பைகளில் அடைக்கும் பணியின்போது தீ விபத்து நேரிட்டது. இதில் ராஜ்பவன் என்ற ஒடிஷா மாநிலத் தொழிலாளியும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது 4 வயது மகன் அங்கித்தும் படுகாயமடைந்தனர். இதில் 50 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அங்கித் பரிதாபமாக உயிரிழந்தான்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments