திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து மரத்தில் மோதி தீ பற்றி எரிந்த கார்

0 453

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த, பாலசந்தர் தனது 3 நண்பர்களுடன், "வோல்ஸ்வேகன்" காரில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். பாலசந்தர் காரை ஓட்டிச் சென்ற நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் மோரணிமலை அருகே காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஏர்பேக் வெளியானதால் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், அங்குவந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments