தெலங்கானாவில் வியூஸ்களை அதிகரிக்க சாலையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய யூடியூபர்

0 561

யூடியூபில் வியூஸ்களை அதிகரிக்கச் செய்வதற்காக தெலங்கானாவில் சாலையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி அதனை மக்கள் போட்டிபோட்டு எடுத்துச்செல்வதை வீடியோவாக பதிவு செய்த யூடியூபருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பவர் ஹர்ஷா என்றழைக்கப்படும் ஐதராபாத்தை சேர்ந்த யூடியூபரான மகாதேவ் என்பவர் கூக்கட்பள்ளி சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நண்பருடன் பைக்கில் சென்று திடீரென்று பணத்தை வானத்தை நோக்கி வாரி இறைத்தார். அதனை எண்ணிப்பார்த்து எவ்வளவு என்பதை தெரிவிக்கும் நபருக்கு உரிய பரிசை அறிவிக்க இருப்பதாகக்கூறி வியூஸ்களை ஹர்ஷா அதிகரிக்கச் செய்து வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments