கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு முதல் உதவிக்கரத்தை நீட்டியது இந்தியா தான் - பிரதமர் மோடி

0 341

உலக நாடுகளுக்கு கோவிட் காலத்தில் முதல் உதவிக்கரத்தை நீட்டியது இந்தியா என்றும் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதுவதாகவும் போலந்து தலைநகர் வார்சாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிகழ்த்திய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியா போரை விரும்பவில்லை, அமைதியையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையும் விரும்புவதாகவும்  கூறிய அவர், இது போருக்கான காலம் அல்ல என்று வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு 16 சதவீதமாக இருந்ததை குறிப்பிட்ட மோடி பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments