அமெரிக்காவில் கொல்லப்பட்ட மகள் உடல் மற்றும் 3 பேரக்குழந்தைகளையும் மீட்டுத்தருமாறு பெண்ணின் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

0 991

அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட மகளின் உடலை இந்தியா கொண்டுவரவும், தவிக்கும் 3 பேரக் குழந்தைகளை மீட்டுத்தருமாறும் இறந்த பெண்ணின் தாய் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

முதுநகரைச் சேர்ந்த லதா என்பவர் அளித்த மனுவில், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனை திருமணம் செய்து கொண்ட தனது மகள் சௌமியா, அமெரிக்காவில் வசித்து வந்ததாக கூறியுள்ளார்.

புதன் அதிகாலை அவரை சுட்டுக்கொன்றுவிட்டு, மருமகனும் தற்கொலை செய்துகொண்டதாக நண்பர் ஒருவர் மூலம் தெரியவந்ததாக அவர் மனுவில் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments