ஜெய்ப்பூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் எடுத்து வரப்பட்ட 1,600 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை பறிமுதல்

0 595

ஜெய்ப்பூரில் இருந்து ரயிலில் சென்னைக்கு எடுத்துவரப்பட்ட கெட்டுப்போன ஆயிரத்து 600 கிலோ மாமிசத்தை எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் கைப்பற்றினர்.

இறைச்சி கடத்தல் குறித்து கிடைத்த தகவலின் பேரில் அனுராத் விரைவு ரயிலில் ஆய்வு நடத்தியதில், சரக்கு பெட்டகத்தில் 26 அட்டைப் பெட்டிகளில் தோல் உரிக்கப்பட்டு இறைச்சியாக்கும் வகையில் உரிய குளிர்சாதன வசதியின்றி அடைத்துவைக்கப்பட்டிருந்த இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

இறைச்சி வெட்டப்பட்டு 5 நாட்களாகியிருக்கும் எனவும், அது ஆட்டிறைச்சி தானா என்பதை கண்டறிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments