ஈரோட்டில் சட்டவிரோதமாக மண் வெட்டிய கும்பலை சுற்றி வளைத்த விவசாயிகள்

0 467

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள 50 ஏக்கர் பரப்பளவு அரசு நிலத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுத்து கொண்டிருந்த ஹிட்டாச்சி வாகனத்தை விவசாயிகள் சிறை பிடித்தனர்.

விவசாயிகள் வருவதை கண்டதும் டிப்பர் லாரிகளை எடுத்துக்கொண்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றது. இந்நிலையில் அங்கு வந்த வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் மேற்கொண்ட ஆய்வில், சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்டதை உறுதி செய்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments