சென்னை வியாசர்பாடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலையில் 5 பேர் கைது

0 461

சென்னை வியாசர்பாடியில் சரித்திர பதிவேடு குற்றவாளியை தலையில் கடப்பா கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

17 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ஆசைதம்பி, வழக்கமாக பி.வி காலனியில் வசிக்கும் விமலா என்பவரது வீட்டிற்கு சென்று வரும் நிலையில் நேற்று இரவும் அங்கு சென்றுள்ளார்.

வெளியே சென்ற விமலா, வீடு திரும்பிய போது, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில், ஆசைதம்பி கிடப்பதாக காவல்துறைக்கு அவர் தெரிவித்ததை அடுத்து, சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

விமலா மற்றும் அவரது அண்ணன் சிவக்குமாரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கொலை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் 5 பேரை கைது செய்தனர். மாமூல் கேட்டு மிரட்டியதால் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆசைதம்பியை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments