புதுச்சேரியில் மது போதையில் ஒட்டக சவாரி செய்ய முயன்ற பராமரிப்பாளரை கீழே தள்ளி காலால் உதைத்த ஒட்டகம்

0 418

புதுச்சேரியில் கடந்த 15ஆம் தேதி ஒட்டகம் மிதித்து பராமரிப்பாளர் உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தனியார் பீச் ரிசார்டில் பொழுதுபோக்கு சவாரிக்காக வளர்க்கப்பட்டு வந்த 2 ஒட்டகங்களை மத்திய பிரதேசத்தை சேர்ந்த 2 பேர் பராமரித்து வந்தனர்.

அவர்களில் 67 வயதான ரமேஷ் குல்மி என்பவர் சுதந்திர தினத்தன்று காலையிலேயே அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஒட்டகம் மீது ஏறி சவாரி செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் கடிவாளத்தை தவறாக இழுத்ததால், வலி தாங்காத ஒட்டகம் அவரை கீழே தள்ளி வாயல் தூக்கி பிரட்டிப் போட்டு பல முறை உதைத்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments