திருப்பூர் மாவட்டத்தில் தூக்கக் கலக்கத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதி கார் விபத்து

0 556

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் அதிகாலை நேரத்தில் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்.

திருச்செங்கோட்டை சேர்ந்த சதீஷ் என்பவர் பொள்ளாச்சி நோக்கி காரில் சென்றபோது, கேரளாவில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த லாரியின் பின்சக்கரத்தில் அதிவேகமாக மோதியதில் கார் நசுங்கி படுகாயமடைந்த சதீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

பின்சக்கரங்கள் தனியாக கழன்று லாரி கவிழ்ந்ததில் லாரி ஓட்டுநர் அஜ்ய்க்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments