போதையில் ஆற்றின் மறுகரையில் படுத்துக் கிடந்த வாலிபர்கள்..சிரமப்பட்டு மீட்ட தீயணைப்புத்துறை

0 290

திற்பரப்பு ஆற்றில் மறுகரையில் சிக்கிய 3 போதை வாலிபர்களையும் 6 சுற்றுலாப் பயணிகளையும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணிநேரம் போராடி மீட்டனர்.

பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் திற்பரப்பில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியது.  ஆபத்தை உணர்ந்த போலீஸார் குலசேகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி மறுகரைக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் நின்றிருந்த ஆறு சுற்றுலா பயணிகளை முதலில் மீட்டனர். பின்னர் மது போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் உட்பட மூன்று வாலிபர்களையும் சிரமப்பட்டு மீட்டு வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments