பச்சை குத்திக்கொள்ள மறுத்ததால் சரமாரி தாக்குதல் - 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..

0 321

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா வந்தவர்களை பச்சை குத்தச் சொல்லி கட்டாயப்படுத்திய ஒரு கும்பல், பச்சை குத்த மறுத்ததால் அவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 

சிவகாசி பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பாபநாசம் சென்று உறவினருக்குத் திதி கொடுத்துவிட்டு, குளிப்பதற்காக குற்றாலம் சென்றுள்ளனர். அவர்களில் மருதமுத்து என்பவரை குற்றாலநாதர் கோவில் அருகே பச்சை குத்திக் கொள்ளுமாறு சிலர் அழைத்துள்ளனர். அவர் வேண்டாம் என்று மறுக்கவே, ஆபாசமாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலைத் தடுக்க முயன்ற மருதமுத்துவின்சகோதரியையும் அவர்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் 7 தையல் போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments