ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஆற்காடு சுரேஷின் மனைவியிடம் விசாரணை..!

0 321

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு ஆற்காடு சுரேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தமிழக எல்லையோரம் உள்ள ஆந்திர கிராமங்களில் பதுங்கி இருந்தனர். ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி, திதி கொடுக்க சொந்த ஊரான ஆற்காடு வரக்கூடும் என கணித்த போலீசார், அப்பகுதியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் கணித்ததுபோலவே, பொற்கொடி அங்கு சென்றுள்ளார்.

அவரை சென்னை அழைத்து வந்துள்ள போலீசார், ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவருக்குத் தொடர்பு உள்ளதா, கொலைத் திட்டம் குறித்த ஆலோசனையில் பங்கேற்றாரா என விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments