பிரேசிலில் உள்ள 'எக்ஸ்' தள அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு..!

0 337

பிரேசில் உச்ச நீதிமன்றம் விதித்த சென்சார் கட்டுப்பாடுகளால், அங்கு இயங்கி வந்த எக்ஸ் அலுவலகத்தை மூடப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் பொல்சனரோவின் ஆதரவாளர்கள், எக்ஸ் தளத்தில் வெறுப்பு பிரச்சாரம் செய்துவருவதாகவும், வதந்திகளை பரப்பிவருவதாகவும் அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மொரேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த கணக்குகளை முடக்குமாறு அவர் பிறப்பித்த உத்தரவை எக்ஸ் தளம் பின்பற்றத் தவறியதாக கூறப்படும் நிலையில், தங்கள் வழக்கறிஞரை கைது செய்யப்போவதாக தலைமை நீதிபதி மொரேஸ் மிரட்டியதால் அலுவலகத்தை மூடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments