செங்கல்பட்டில் கணவனின் தவறான நடவடிக்கை மற்றும் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

0 512

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, திருமணமான ஐம்பதே நாளில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

பையம்பாடியைச் சேர்ந்த வினிதாவும், திருவானைக்காவலைச் சேர்ந்த ரஞ்சித்தும் கல்லூரி நாட்களில் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன்கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர்.

சில நாட்களில் ரஞ்சித்துக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் அவரது குடும்பத்தார் வரதட்சணை கேட்டு வினிதாவை கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் தாய் வீட்டுக்குச் சென்ற வினிதா, ஒரு கட்டத்தில் ரஞ்சித்தை மன்னித்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு கேட்டுள்ளார். வாட்சப் மெசேஜ் உட்பட பல வழிகளில் தொடர்புகொண்டும் ரஞ்சித் பதிலளிக்காததால், மன உளைச்சலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments