சென்னையில் நகைக்கடைக்குள் புகுந்து உரிமையாளரைத் தாக்கி 50 சவரன் கொள்ளை... 3 பேரை தேடும் போலீசார்

0 283

சென்னை, திருமுல்லைவாயல் அருகே செந்தில் நகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த 3 பேர் கும்பல், கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தராததால் சிறு கத்தியால் தாக்கிவிட்டு 50 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், இரவு 9 மணியில் இச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மயங்கிய ரமேஷ் குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆவடி காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் நேரில் ஆய்வு செய்த நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments