விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவம் வளர்ச்சி அடைந்துள்ளது - கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி

0 975

முதுகுத்தண்டு வடத்தில் காயமுற்ற பும்ரா 7 மாதங்களில் திரும்பி வந்து உலக கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுக்கவும், மிகப்பெரிய விபத்தை சந்தித்த ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் விளையாடவும் நமது மருத்துவர்களே காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற மருத்துவர்கள் மக்கள் மன்ற துவக்க விழாவில் பங்கேற்ற லட்சுமிபதி பாலாஜி, தனக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்ட போது இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவம் நவீனமானதாக இல்லாததால் வெளிநாட்டில் 3 ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments