நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்..!

0 423

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் ஞாயிற்று காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சிகிச்சைப்பிரிவுகளும் செயல்படும் என்றும் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான பிரிவு மட்டும் செயல்படாது என்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பெண் மருத்துவர் கொல்லப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 5 மருத்துவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. பெண் மருத்துவரின் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில், மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுவோரிடம் தீவிர விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments