நள்ளிரவில் பெண் மருத்துவரிடம் அத்துமீற முயன்ற இளைஞர்.. மருத்துவமனையில் பாதுகாப்பு கோரி மருத்துவர்கள் தர்ணா

0 511

கோவை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் இளைஞர் ஒருவர் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மற்ற மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

புதனன்று நள்ளிரவில் வாகன பார்கிங் பகுதிக்குச் சென்ற பெண் மருத்துவர் முன்பு இளைஞர் ஒருவர் நிர்வாணமாக நின்று அவருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பெண் மருத்துவர் கூச்சலிடவே அங்கு வந்த காவலர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் புலம்பெயர் தொழிலாளி என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், போதிய பாதுகாப்பு, சிசிடிவி கேமரா மற்றும் கழிப்பிட வசதி கோரியும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா  பேச்சுவார்த்தை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments