அந்தியூர்-பர்கூர்-கொள்ளேகால் மலைப்பாதையில் மண்சரிவு.. தமிழகம் - கர்நாடகம் இடையே போக்குவரத்து தடை

0 304

கனமழை காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் - கொள்ளேகால் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டு சாலையில் கற்கள் குவிந்து கிடக்கின்றன.

பல இடங்களில் தார்ச்சாலை பெயர்ந்துள்ளதால், தமிழகம்-கர்நாடகம் இடையே போக்குவரத்து தடைபட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் செல்லம்பாளையத்திலும், கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் பர்கூரிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு, மண் மற்றும் கற்குவியலை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments