சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 'U' வடிவ மேம்பாலம்.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்..?

0 345

சென்னை, தரமணியில் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இரண்டாவது 'U' வடிவ மேம்பாலம் அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டைடல் பார்க் சந்திப்பில் இரண்டு U வடிவ மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, 19 தூண்களுடன் 12.5 மீட்டர் நீளமுள்ள ஒரு மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டது.

சுமார் 18 கோடி ரூபாய் செலவில் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கி, 18 தூண்களுடன் அமையும் மேம்பாலத்தில் மையத் தூண் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சோழிங்கநல்லூரிலிருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் சிக்னலுக்காக காத்திருக்காமல் யுடர்ன் செய்து இந்திராநகர், அடையாறு மற்றும் திருவான்மியூர் செல்லலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments