பாலம் கட்டுமான பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர்.. கம்பிகள் கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பலி

0 381

மயிலாடுதுறை அருகே, சாலையின்குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பைக்குடன்தவறி விழுந்த வாலிபர், கட்டுமானக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை - திருவாரூர் நெடுஞ்சாலையில், எலந்தக்குடி பகுதியில், சாலையின்குறுக்கே சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவில், அவ்வழியே பைக்கில் வந்த, வழுவூரைச் சேர்ந்த மணிகண்டன்என்ற வாலிபர், பாலத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்ததில், கட்டுமானக் கம்பிகள் கழுத்தில் குத்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அங்கு திரண்ட வாலிபரின்உறவினர்கள், நெடுஞ்சாலைத்துறையும், ஒப்பந்ததாரரும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால்தான்விபத்து நிகழ்ந்ததாகக் குற்றஞ்சாட்டி, சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டு, உடல் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments