17 வயது சிறுவனை காவல் நிலையம் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டிய திமுக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

0 417

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 17 வயது சிறுவனை காவல் நிலையம் அருகே கத்தியால் சரமாரியாக வெட்டிய திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ரயில்வே பாலம் அருகில் அமைக்கப்பட்ட வேகத் தடையில் இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி விழுந்த பூதேரியைச் சேர்ந்த சிறுவன், சாலையை சரியாக போடவில்லை என்று அதிகாரிகள் மற்றும் தமிழக அரசை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதனை திமுக பிரமுகரான அபி என்பவர் தட்டிக் கேட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதில், அபியும் அவரது நண்பர்கள் 5 பேர் சிறுவனை வெட்டியதாக போலீசார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments