5 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோயில்.. கண்ணீர் மல்க வழிபட்ட பெண்கள்

0 484

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கூடங்குளத்தில், 5 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோயிலில் பெண்கள் கண்ணீர் மல்க வழிப்பட்டனர்.

5 ஆண்டுகளுக்கு முன், கோயில் திருவிழாவின்போது, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் வருவாய்துறையினர் கோயிலுக்கு சீல் வைத்தனர்.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஒன்றாம் தேதியே கோயிலை திறக்குமாறு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருந்தபோதும் அதிகாரிகள் கோயிலை திறக்காமல் இருப்பதாக கூறி, ராதாபுரம் தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதை அடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு, நடை திறக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments