பிளஸ் டூ மாணவனை அதே பள்ளியில் படிக்கும் 3 சக மாணவர்கள் கடத்தல்

0 321

புதுக்கோட்டையில் 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலையில் பள்ளிநேரம் முடிந்து வெளியே புறப்பட்ட 12ம் வகுப்பு மாணவனை, அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் அடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடத்திச் சென்ற மாணவனை 3 மாணவர்களும் புதிய பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்திய போலீசார், மாணவர்களுக்கு அறிவுரைகூறி அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments