கூட்டுறவு வங்கிக்குள் பற்றிய தீ: சங்க செயலாளர் கருகி பலி... பெட்ரோல் பாட்டில், தீப்பெட்டியை கைப்பற்றிய போலீஸார்

0 283

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலகத்தில் தீயில் கருகிய நிலையில் சங்க செயலாளர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அலுவலகத்தில் பணியாற்றி வந்த 2 பெண்கள் மதிய சாப்பாட்டிற்காக வெளியே சென்றிருந்த நிலையில் சங்க செயலாளர் ஸ்ரீதரன் மட்டும் உள்ளே இருந்த போது பயங்கர சத்தத்துடன் கணினியின் பேட்டரி வெடித்து தீ பற்றியதாக கூறப்படுகிறது.

தீப்பிடித்தது குறித்து ஸ்ரீதரன், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீஸார் சோதனை நடத்தி, வங்கியில் ஒரு பாட்டிலில் இருந்த பெட்ரோலையும், அதனருகே இருந்த தீப்பெட்டியையும் கைப்பற்றினர்.

ஆடிட்டிங் செய்ய வங்கிக்கு அதிகாரிகள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இந்த சம்பவம் நடந்ததால் ஸ்ரீதரன் தற்கொலை செய்திருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments