சென்னை மெரினா கடற்கரையில் மாடுகளை பிடித்த போது தகராறு... மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய மாடுகளின் உரிமையாளர்களை தேடும் போலீசார்

0 319

சென்னை, மெரினா கடற்கரை பூங்காவிற்கு பின்புறம் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வண்டியில் ஏற்றிய மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக மாடுகளின் உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜா, கோபால் என்ற அவ்விருவரும் தங்களுடன் வாக்குவாதம் செய்து வாகனத்தில் ஏற்றப்பட்ட மாடுகளை இறக்கியதாகவும், அதனை தடுக்க முயன்ற தங்களை தாக்கியதாகவும் மாநகராட்சி ஊழியர் வேணு போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments