சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

0 179

சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் 30க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தண்டவளம், ரயில் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடைமைகளில் சோதனை செய்யப்பட்டது.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகள் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments