சென்னை கீழ்ப்பாக்கத்தில் தப்பிக்க முயன்ற ரவுடியை காலில் சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ.

0 507

சென்னை டி.பி. சத்திரத்தில் போலீசாரை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். மயிலாப்பூர் சிவக்குமார் கொலை உள்ளிட்ட 13 குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் ரோஹித் ராஜனை தேனியில் பதுங்கி இருந்த போது கைது செய்ததாக தெரிவித்துள்ள போலீசார், தாம் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களைக் காட்டுவதாகக் கூறி கீழ்பாக்கம் அரசு கல்லறை தோட்டத்துக்கு ரோஹித் ராஜன் அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

அப்போது, சரவணக்குமார், பிரதீப் என்ற இரு காவலர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்ற ரோஹித் ராஜனை எஸ்.ஐ. கலைச்செல்வி வலது காலில் சுட்டதாக கூறப்படுகிறது. சுருண்டு விழுந்த ரோஹித் ராஜனும், அவரால் வெட்டப்பட்ட போலீசார் 2 பேரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments