கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி உறவினர்கள் மறியல் - திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

0 274

திருவள்ளூர் அருகே கச்சூரில் கல்லூரி மாணவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி மாணவரின் தாயார் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கச்சூர் பேருந்து நிலையத்தில் தகராறு நடந்தபோது அங்கு சென்ற மாணவர் பிரசாந்த்தை, தீபக் மற்றும் தேவா ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் உள்காயமடைந்த பிரசாந்த், இரண்டு தினங்களுக்கு பின்னர் மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக் கோரி  திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments