அரசுப் பேருந்தில் பயணத்தின் போதே உயிரிழந்த இளைஞர் - மாரடைப்பு காரணமா அல்லது வேறு காரணமா என விசாரணை

0 326

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்தில் உயிரிழந்த பயணியின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழைய குயிலம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி என்ற இளைஞர், சேலத்திலிருந்து செங்கத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார்.

பேருந்து செங்கம் பேருந்து நிலையம் வந்தடைந்ததும் பயணிகளை இறங்குமாறு நடத்துநர் கூறிய நிலையில், கலைமணி மட்டும் அவரது இருக்கையில் அசைவற்றுக் கிடந்துள்ளார்.

அவர் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து, பேருந்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. கலைமணி மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments