மயில் கறி சமைப்பது எப்படி என வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது

0 594

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசில்லாவில், மயில் கறி சமைப்பது எப்படி என யூடியூபில் வீடியோ பதிவேற்றிய பிரணய் குமார் என்பவரை, வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின்போது, யூடியூபில் அதிக Like, Views பெறுவதற்காக கோழி இறைச்சியை சமைத்து மயில் இறைச்சி என வீடியோ வெளியிட்டதாக பிரணய் குமார் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் சமைத்த கறிக் குழம்பை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளதாகவும், அதன் முடிவை பொறுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments