அரசு கலை கல்லூரியில் ரூ.5.25 கோடி மதிப்பில் புதிய கட்டடம்... திறப்பு விழாவுக்கு அழைக்காததால் பொன்னேரி எம்.எல்.ஏ. அதிருப்தி

0 266

காமராஜர் துறைமுகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி மூலம், பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலை கல்லூரியில், 5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

கட்டட திறப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறி பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரும், அவரது ஆதரவாளர்களும் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ்-ஐ முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

அதை பொருட்படுத்தாத சுனில் பாலிவால், குத்து விளக்கை ஏற்றி கட்டிடத்தை திறந்துவைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments