சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை

0 436

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜைகள் இன்று காலை நடைபெற்றது.

தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்காக, திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன் கோயில் வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து பவனியாக கொண்டுவரப்பட்டது. பூஜைக்கு பின்னர், அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்  இன்றிரவு  10 மணிக்கு நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments