வேதாரண்யம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் மின் கம்பியை பிடித்து தற்கொலை

0 392

வேதாரண்யம் அருகே கணவர் தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாளாமல் மனைவியும் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

குமரேசன், புவேனேஸ்வரி தம்பதியருக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. மளிகை கடை நடத்திவரும் குமரேசன் கடன் சுமையால் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில், இன்று காலை வீட்டு மாடி அருகே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.

சத்தம் கேட்டு மனைவியும், பெற்றோரும் மாடிக்கு ஓடி சென்றபோது, கணவர் இறந்து கிடப்பதை பார்த்து புவனேஸ்வரியும் உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டதாக  குமரேசனின் பெற்றோர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments