கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி

0 352

திருவள்ளூர் மாவட்டம் ராமஞ்சேரி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், சென்னை எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றும், ஊரில் இருந்து சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தப்பி ஓட முயன்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். விபத்து காரணமாக, இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments